மாயமான் வேட்டை: ஒரு கேள்வியும் பதிலும்…

சாரு, மாயமான் வேட்டையின் மொழி இன்னும் சற்று அடர்த்தியாக இருந்திருக்கலாம் இல்லையா?  உங்களுடைய நேனோ, நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்கள், உன்னத சங்கீதம் போன்ற கதைகள் வெகு அடர்த்தியான மொழியில் எழுதப்பட்டதுதானே?  மேலும், “கரும்புத் தின்னக் கூலியா?” போன்ற தேய்வழக்குகளை இந்தக் கதையில் பயன்படுத்த வேண்டுமா? காயத்ரி. ஆர். முதல் கேள்வி பற்றி சில நண்பர்கள் என்னிடம் முன்பே விவாதித்தது உண்டு.  அடர்த்தியான மொழி என்பது சிறுபத்திரிகைகளின் ஒரு தன்மை.  பெரும் வணிகப் பத்திரிகைகளின் தட்டையான மொழிக்கு … Read more

மாயமான் வேட்டை (ஒரு நீண்ட சிறுகதை)

கடும் மன உளைச்சலில்தான் சாந்த்தியாகோ நகரத்துக்கு வந்து சேர்ந்தேன்.  மாச்சு பிச்சுவில் பிரச்சினையே இல்லை.  ஆனால் குஸ்கோவில் மூச்சு விட முடியவில்லை.  இரண்டு காரணங்கள்.  மாச்சு பிச்சுவின் உயரம் 8000 அடிதான்.  குஸ்கோ 12000 அடி.  மாச்சு பிச்சுவில் சுற்றியது பகல்.  குஸ்கோவில் இரவு.  குஸ்கோவில் இரவு தூங்கி விட்டு பகலில் ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டு அடுத்த நாள் உயூனி போகலாம் என்பது திட்டம்.  உயூனி ஒரு உலக அதிசயம்.  11,000 சதுர கிலோமீட்டர் பரப்பில் … Read more

மாயமான் வேட்டை

நேற்று மாலையில் எழுதத் தொடங்கிய கதையை இன்று இரவு ஒன்பது மணிக்குத்தான் முடித்தேன். அதைப் பதிவேற்றம் செய்வதில் ஒரு பிரச்சினை. ஸ்ரீராமைப் பதிவேற்றம் செய்யச் சொல்லியிருக்கிறேன். என்னுடைய மிக முக்கியமான கதை. சிறிது நேரத்தில் இங்கே பதிவேற்றம் செய்யப்படும்…

8. டென் டௌனிங்கில் ஒரு சந்திப்பு (சிறுகதை)

இளைய எழுத்தாளர்களின் புத்தகங்களையும் மூத்த எழுத்தாளர்கள் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டுமா என்று கேட்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.   உதாரணமாக, வண்ணநிலவன் ஆயிரம் ரூபாய் கொடுத்து என்னுடைய எக்ஸைல் நாவலை வாங்கினால் அதை எனக்குச் சேரும் பாவம் என்றே கருதுவேன்.  (அம்மாதிரி அதிபயங்கர விபத்தெல்லாம் நடந்து விடாது, சும்மா ஒரு கற்பனை!) வண்ணநிலவன் போன்ற ஒரு லெஜண்டரி எழுத்தாளர் என் புத்தகத்தை ஆயிரம் ரூபாய் கொடுத்து  வாங்குவதா?  அதே மாதிரிதான் அசோகமித்திரன் என்னுடைய புத்தகத்தைக் காசு போட்டு … Read more

திருவாரூரில் ஒரு சின்ன வேலை

பொறாமை பற்றி சமீபத்தில் ஒரு கதை எழுதினேன் இல்லையா, ஜக்கியை வைத்து.  அது கதை என்பதால் ஒரு திசையில் போய் விட்டது.  எதார்த்தம் என்னவென்றால், எனக்கு ஜெயமோகனின் வாசகர்கள் மீதுதான் பொறாமை.  ஏன் என்று இதைப் படித்து முடித்தால் உங்களுக்குப் புரியும்.  ஒரு நண்பர்.  ரொம்ப இளைஞர்.  வாசகர் வட்டத்தின் உள் வளையத்தைச் சேர்ந்தவர்.  சொந்த ஊர் திருவாரூர்.  திருவாரூரில்தான் வசிக்கிறார்.  தினந்தோறும் எனக்கு ஏதாவது இசை பற்றிய லிங்குகளை வாட்ஸப்பில் அனுப்புவார்.  95 சதம் எனக்கு … Read more

7. பரமசிவனுக்கும் பார்வதிக்கும் நடந்த ஒரு குட்டி உரையாடல்

நித்திரை வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார் பரமசிவன்.  அவர் இப்படிப் புரண்டதில் விழித்துக் கொண்ட பார்வதி “என்ன ஷிவ், நித்திரை வர்லியா, ஏதாவது வாய்வுப் பிரச்சினையா?  அதனால்தான் ராத்திரியில் சக்கரைப் பொங்கலையும் வெண்பொங்கலையும் வச்சு வச்சு அடிக்காதீங்கன்னு அடிச்சுக்கறேன்.  நீங்க என் பேச்சைக் கேக்கறதே இல்லை.  ரொம்ப சொன்னா எதாவது சாபத்தைக் கொடுத்து மாடா போ ஆடா போன்னு அனுப்பி வைச்சிடுவீங்க.  அப்புறம் என்னைக் காப்பாற்ற எங்க அண்ணாதான் கோகுல கிருஷ்ணனா வரணும்…” “ஏய் பார்வி… … Read more