பெட்டியோ நூறாவது பிரதி: விற்பனையில்…

இன்று காலையில் எழுந்து பார்த்தபோது வாட்ஸப்பில் வினித்தின் மெஸேஜ். பெட்டியோ நூறாவது பிரதியை வெளியிட்டு விட்டது பற்றி. நேற்று இரவு வரை கூட இந்த விஷயம் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரியாமலேயே இது வெளிவந்த காரணத்தை வினித் தன் குறிப்பில் விளக்கியிருக்கிறார். இன்னொரு விஷயம், வினித்தின் மெஸேஜ் வந்த நேரம் காலை ஐந்தரை. ஆனால் மெஸேஜில் குட்மார்னிங் என்பதற்குப் பதிலாக குட் நைட் என்று இருந்தது. இந்த நாவல் என்.எஃப்.டி.யில் வெளிவருவதற்காக பல நண்பர்கள் இரவு பகலாக … Read more

புழுதி: காரையன் கதன்

நான் இலங்கை சென்றிருந்த போது எனக்கு அறிமுகமான பதிப்பகம் தாயதி. அதேபோல் அங்கே அறிமுகமான நண்பர்களில் முக்கியமானவர் காரையன் கதன். சின்ன வயதில் நான் எப்படி இருந்தேனோ அதேபோல் இருக்கிறார். என்ன இப்படி ராக் பாடகர் போல் இருக்கிறீர்கள் என்று கேட்ட போது நீங்கள்தான் ரோல் மாடல் என்றார். இவர் என் வாழ்வில் மிகவும் முக்கியமானவர். இவரைப் போன்ற ஒரு மனிதரை நான் இதுவரை சந்தித்தது இல்லை. சுத்தமாக ஆங்கிலம் தெரியாது. இவரது அனுபவங்கள் பெட்டியோ நாவலில் … Read more

Conversations with Aurangzeb நாவல் பற்றி அதன் பதிப்பாசிரியர்…

ஹார்ப்பர் காலின்ஸின் பதிப்பாசிரியர்களில் ஒருவரான ராகுல் சோனி அந்த நாவல் பற்றித் தன் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். மொழிபெயர்ப்பின்போது ராகுல் சோனியின் பங்களிப்பும் இருந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன் அல்மோஸ்ட் ஐலண்ட் நடத்திய ஒரு கருத்தரங்கில் ராகுல் சோனியுடன் மூன்று தினங்கள் ஒரே இடத்தில் தங்கி உரையாடியிருக்கிறேன். அவர் ஸீரோ டிகிரியையும் நினைவு கூர்ந்து இப்போது எழுதியிருக்கிறார். ஔரங்ஸேப் நாவலின் ஒவ்வொரு வார்த்தையையும் நுணுக்கமாக வாசித்து, ஒவ்வொன்றின் அவசியத்தையும் பற்றி விவாதித்து, கதையின் ஊடாகவும் சென்று கேள்விகள் கேட்டு, … Read more

ஜெயமோகனும் லாஸ்லோ க்ராஸ்னஹோர்காயும்…

நேற்று தருண் தேஜ்பால் தொலைபேசியில் அழைத்து ஜெயாமோகனுக்கு என்னுடைய நூல்களை நீ அனுப்பி வைக்க முடியுமா என்று கேட்டார்.  ஜெயாமோகனை இவருக்கு எப்படித் தெரியும் என்று ஆச்சரியப்பட்டேன்.  இன்று விடை கிடைத்து விட்டது.  வாழ்த்துக்கள் ஜெயமோகன்.  இதைத்தான் கடந்த முப்பது ஆண்டுகளாக சொல்லி வருகிறேன்.  தமிழில் எழுதும் பெரும்பாலானவர்கள் சர்வதேச எழுத்தாளர்களுக்கு நிகரானவர்கள்.  ஆனால் சரியான மொழிபெயர்ப்பு இல்லாததால் நாம் சர்வதேச அளவில் தெரிய வராமல் இருந்தோம்.  இப்போது பல மொழிபெயர்ப்பாளர்கள் தோன்றி விட்டார்கள்.  சர்வதேச அளவில் … Read more

சித்த மருத்துவம்

ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். நான் எந்த மருத்துவ முறைகளுக்கும் எதிரானவன் அல்ல. ஆனால் சித்த மருத்துவம் நம் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. காரணம்? ஆங்கிலேயர்கள். நான் ஏற்கனவே இது பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். இருந்தாலும் மீண்டும் சுருக்கமாகச் சொல்கிறேன். Zoltan Fabri ஹங்கேரிய சினிமா உருவாக்கிய மேதைகளில் ஒருவர். அவர் இயக்கிய எல்லா திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். அதில் ஒன்று The Fifth Seal. 1976இல் வெளிவந்த இந்தத் திரைப்படத்தை நான் 1979இல் பார்த்தேன். தில்லியின் மையப்பகுதியான கனாட் … Read more

ஔரங்ஸேப் பற்றி ஒரு கடிதம்

அன்புள்ள சாரு, சில நாட்களாக இரவு ஆரம்பிக்கையிலே ஏதோ விபரீதமான எண்ணங்களும், மனிதர்களின் மேலுள்ள அபிமானமும் மாறிமாறி கேள்விகளாகத் துன்புறுத்திக் கொண்டே வந்தன. இப்படி இருக்கையில்தான் சில வாரங்களுக்கு முன்னர் தங்களுடைய ‘நான்தான் ஔரங்ஸேப்’ நாவலை வாசிக்கலாம் என்று எடுத்தேன். இதற்கு முன்னர் நான் படித்த உங்கள் எழுத்தில் இருந்து இது வேறு ஒன்றாக இருக்கிறது. உங்கள் பாணியில் சொல்ல வேண்டுமானால் முழுவதுமாக ரகளையான மொழிநடையில் மீறல் நிரம்ப பயணிக்காமல் ஔரங்ஸேப் பேசுவதில் இருந்தே மிகவும் அமைதியான … Read more