பசி

வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பது எனக்குப் பிடிக்காது. கொஞ்சமும் பிடிக்காது. ஆனால் பிராணிகளைப் பிடிக்கும். வீட்டில் வளர்ப்பதுதான் பிடிக்காது. அதற்காகத் தெருவில் விட வேண்டும் என்று சொல்லவில்லை. எந்த தேசத்தில் பிராணிகள் தெருவில் திரிகின்றனவோ அந்த நாடு இந்த உலக வரைபடத்திலேயே இருப்பதற்கு லாயக்கில்லாதது என்று நினைக்கிறேன். ஒரு சில விதிவிலக்குகள் உண்டு. துருக்கியின் தெருக்களில் எங்கு பார்த்தாலும் பூனைகள் திரியும். ஆனால் அவை பசித்திருப்பதில்லை. துருக்கி சமூகமே அந்தப் பூனைகளை வளர்க்கிறது. அப்படியிருந்தால் பிரச்சினை இல்லை. … Read more

மெதூஸாவின் மதுக்கோப்பை

அன்புள்ள சாரு,நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு மறுவாசிப்புக்கு “மெதூஸாவின் மதுக்கோப்பை”யை எடுத்தேன். நான் அடுத்த வாரம் ப்ரான்ஸ்  செல்லவிருப்பதாலோ என்னவோ ! ஆனால் தற்செயல் தான். இந்தப் புத்தகத்தைப் பொறுத்த மட்டில் இலக்கியம் பேச வேண்டுமானால் நிறைய இருக்கிறது, அதற்கு இடமும் நேரமும் இல்லை. மேலும் முன்னுரையில் நீங்கள் தெளிவாகக் கூறிவிட்டீர்கள் “நான் படித்த ஃப்ரெஞ்ச் இலக்கியம் ஃப்ரெஞ்ச் தத்துவம் பார்த்த ஃப்ரெஞ்ச் சினிமா என்ற எல்லா  அனுபவத்தையும் ஒன்று திரட்டி ஒரு புத்தகமாகக் கொண்டு வரலாம் என்று … Read more

செருப்படி : அராத்து

சாருவின் சமீபத்திய கட்டுரையைப் படித்தேன். ஏற்கனவே பலமுறை அவர் செருப்பால் அடித்ததுதான். மீண்டும் அனைத்து செருப்படிகளையும் ஒன்றாக்கி காம்போவாக அளித்து , சாரி அடித்து இருக்கிறார். ஜெயிலில் , திடீரென்று கொத்துக் கொத்தாகக் கூப்பிட்டு அடிப்பார்கள். என்னா ஏது என யாரேனும் விசாரித்தால், ரொம்ப துளிர் விட்டுப்போச்சி, அப்பப்ப அடிச்சி தொவச்சி வச்சாதான் சரிப்பட்டு வரும் என்பார்கள். அதுபோல எல்லாம் சாரு செய்வதில்லை. அவ்வப்போது சீரான இடைவெளியில் யாரேனும் வந்து சென்ஸிபிளிட்டி இல்லாமல் சீண்டி தானும் செருப்படி … Read more

எழுத்தாளன் என்றால் எடுபிடியா?

எழுத்தாளர்களைத் தமிழ்ச் சமூகம் கொண்டாடுவதில்லை என்று நான் அடிக்கடி சொல்லி வருகிறேன்.  அது என் நண்பகள் பலருக்கும் புரிவதில்லை.  ”உங்கள் நாவலை ஒரு லட்சம் கொடுத்து வாங்குகிறார்கள், பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள்.  அப்படியும் நீங்கள் இப்படிச் சொல்லலாமா?” என்பது அவர்கள் கேள்வி. அப்படி வாங்குபவர்கள் என் வாசகர்கள்.  தமிழ்ச் சமூகம் அல்ல.  தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்களைத் தங்கள் எடுபிடிகளாக நினைக்கிறது.  பிரபு தேவா என்ற சினிமாக்காரருக்காக ஐயாயிரம் குழந்தைகளை இந்தக் கொடூரமான வெய்யிலில் நிறுத்தி வதைத்திருக்கிறார்கள்.  … Read more

அராத்து, ஜக்கி, ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்

சினிமாவில் கவுண்டமணி செந்தில் காமெடிக்குப் பிறகு வந்த காமெடியில் வடிவேலு மட்டும்தான் என் மனதில் நிற்கிறார். பிறகு அவர் வில்லனாக மாறின பிறகு அவரும் மனதிலிருந்து நீங்கி விட்டார்.  ஆக, வாழ்க்கையில் காமெடிக்குப் பஞ்சமான நிலைமைதான்.  வாசகர் வட்டத்திலும் சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர்கள் யாரும் இல்லை.  சீனி ஒரு புத்திசாலி.  புத்திசாலிகளுக்குக் காமெடி வராது.  ஜக்கியும் புத்திசாலி.  அவருக்கும் காமெடி வராது.  இப்படிப்பட்ட காமெடி வறட்சி மிகுந்த பாலைவனத்தில் ஒரு சோலையாக விளங்குபவர் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர்.  எனக்கு … Read more

சென்னை வாழ்க்கை

இந்தியாவிலேயே சென்னைதான் மனிதர்கள் வாழவே முடியாத நகரமாக மாறியிருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே இப்படித்தானா என்று தெரியாது. நான் முப்பத்தைந்து ஆண்டுகளாக சென்னையில் வாழ்கிறேன். முப்பத்தைந்து ஆண்டுகளாக இப்படித்தான் கதை. நான் எழுதப் போவது சென்னைவாசிகளுக்கும் சென்னைக்குக் குடியேறிய எழுத்தாள சிகாமணிகளுக்கும் பிடிக்காது. ஏனென்றால், அப்படி வந்த எழுத்தாளர்கள் ஏதோ சென்னையை ஒரு சொர்க்கலோகம் மாதிரி எழுதித் தள்ளுகிறார்கள். மைலாப்பூரில் ஒரு பிராமணர் (ஐயர்) முடிதிருத்தும் கடை வைத்திருக்கிறார். கர்னாடக இசை ஒலிக்கும். முகப்பில் மஹா பெரியவரின் பெரிய படம். … Read more