வைர சூத்திரத்தின் விலை

ஏற்கனவே பல முறை எழுதிய விஷயம்தான்.  மீண்டும் எழுத வேண்டியிருக்கிறது.  ஒரு இணைய இதழில் நான் கொடுத்த மிக நீண்ட நேர்காணலை நீங்கள் படித்திருப்பீர்கள்.  என் எழுத்து வாழ்விலேயே எனக்கு அதிக எதிர்வினைகள் வந்தது அந்த நேர்காணலுக்குத்தான்.  அதற்கு முன்பு ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகையின் இணைய இதழில் கோணல் பக்கங்கள் என்ற பத்தியை எழுதியபோதுதான் அந்த அளவுக்கு எதிர்வினைகள் வந்தன.  அந்த நீண்ட நேர்காணல் ஒரு நூறு பக்க புத்தகமாக வரும்.  நூறு பிரதிகள் விற்கும்.  எனக்கு அதன் மூலம் ஆயிரம் ரூபாய் ராயல்டி கிடைக்கும்.  நேர்காணல் வந்த … Read more

ஓர் அறிவிப்பு

நான் எழுதி நம் தளத்தில் வெளிவந்த T.M. Krishna’s Fake Intellectualism என்ற கட்டுரையை நடுநிலைமையான ஒரு ஆங்கிலப் பத்திரிகை வெளியிட இருப்பதால் என் தளத்திலிருந்து அதை நீக்குகிறேன். வேறு எதுவும் காரணம் இல்லை.

டி.எம். கிருஷ்ணாவும் கருத்துச் சுதந்திரமும்

டி.எம். கிருஷ்ணா பற்றிய என் கட்டுரையை நானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு அனுப்பினேன். அவர்கள் என் நண்பர்கள். அவ்வப்போது அதில் எழுதவும் சொல்லியிருந்தார்கள். ஆனால் கட்டுரையில் என் வாதத்துக்கான வலு இல்லை என்று பிரசுரம் மறுக்கப்பட்டு விட்டது. மற்ற ஆங்கிலப் பத்திரிகைகள் எதுவும் அக்கட்டுரையைப் பிரசுரிக்காது. அவர்கள் அனைவருமே ஹிந்துத்துவாவைத் தீவிரமாக எதிர்ப்ப்பவர்கள். டி.எம். கிருஷ்ணாவை ஆதரித்து எழுதினால்தான் பிழைக்க முடியும். ஒரே ஒரு பத்திரிகையில் என் கட்டுரையை ஆரவாரமாகப் பிரசுரிப்பார்கள். ஆனால் அது … Read more

Camus and Me: Shree

During my time of imprisonment, which lasted around 8 years, I came across a book “The Stranger” by Albert Camus. I was attracted by its simple title. Around my sixth year in prison, I felt like I had reached the peak of feeling lost and meaningless. Albert Camus was the first author I really connected … Read more

வாசகர் சந்திப்பு : பெங்களூர்

ஏப்ரல் 5, 6, 7, 8 தேதிகளில் பெங்களூரில் நம்முடைய வாசகர் சந்திப்பு நடைபெற உள்ளது. சில காரணங்களால் மார்ச்சிலேயே நடக்க இருந்த சந்திப்பு இப்போது ஏப்ரலுக்குத் தள்ளிப் போயிருக்கிறது. இந்த முறை எந்த மாற்றமும் இராது. நிச்சயம் மேற்கண்ட தேதிகளில் பெங்களூரில் இருப்பேன். வர விரும்பும் நண்பர்கள் வரலாம். வழக்கம் போல் கோரமங்கலாவில் தங்குவேன்.

டி.எம். கிருஷ்ணா – 2

இன்னும் சில விஷயங்கள் விடுபட்டு விட்டன. ரஞ்சனி, காயத்ரி இருவரும் பெரியார் பற்றிக் கூறிய விஷயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. அதை முதலில் தெளிவுபடுத்தி விடுகிறேன். பாப் பாடகர் பாப் டிலனுக்கு 2016இல் இலக்கியத்துக்கான நோபல் விருது கிடைத்தது. அதேபோல் டி.எம். கிருஷ்ணாவுக்கும் இலக்கியத்துக்கான நோபல் விருது கிடைத்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால், மேற்கத்திய நாடுகளில் இந்தியாவையும், ஹிந்து மதத்தையும் திட்டுபவர்களுக்கும் அவதூறு செய்பவர்களுக்கும் பெரிய மரியாதை கொடுக்கப்படுகிறது. இதை என் விஷயத்திலேயே கவனித்து விட்டுத்தான் சொல்கிறேன். … Read more

டி.எம். கிருஷ்ணா

ஒரு மாதத்துக்கு முன்னால் ஒருநாள் வினித் ஒரு ஆடியோ பதிவைப் போட்டுக் காண்பித்தார்.  கர்னாடக இசை.  அந்தப் பாடகரின் குரலும் பாவமும் தீவிரமும் சென்ற தலைமுறையைச் சேர்ந்த இசைக் கலைஞர்களிடம் மட்டுமே காணக் கூடியதாக இருந்தது.  யாரப்பா இது, இதுவரை நான் இவரைக் கேட்டதில்லையே, பூரணமான இறையருள் பெற்றவராகத்தான் இருக்க வேண்டும் என்றேன்.  சிரித்துக் கொண்டே அவருடைய இன்னொரு காணொலியைக் காண்பித்தார் வினித்.  இருபது வயது இளைஞன் ஒருவன் நெற்றியில் ஸ்ரீசூர்ணம் துலங்க அற்புதமாகப் பாடிக்கொண்டிருந்தான்.  பார்ப்பதற்கு … Read more