சாருவுடன் சில தினங்கள்…

வாசகர்கள் எழுத்தாளர்களை நேரில் சந்திக்கக் கூடாது என்ற  கருத்தை சுஜாதா ஒரு தடவை சொல்லப் போக, தமிழ்நாட்டின் வாசிப்புத் தளத்தில் சுஜாதா அப்போது பெரும் சக்தியாக விளங்கியதால் அவர் சொன்னது அனைத்து வாசகரிடத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அது ஒரு தவறான கருத்து.  காரணம்? சாக்ரடீஸிலிருந்து இன்றைய எழுத்தாளர் வரை அவர்கள் எழுதியவற்றை விட பேச்சின் மூலமும் உரையாடலின் மூலமும்தான் அதிகமான சிந்தனை மாற்றங்களை வாசகரிடத்தில் ஏற்படுத்துகிறார்கள்.  என்னை எடுத்துக்கொண்டால், நான் எழுதியது வெறும் பத்தே … Read more

அமிர்தம் வேண்டி நின்றேன்…

வரம் கேள் என்றால்யாராவது கையில் இருப்பதையேதிரும்பவும் கேட்பார்களா? இருப்பதை இல்லாததாய்க்காண்பவனே கவிஅதுவும் தவிரநீகுரலாக ஒலிக்கிறாய்நினைவாக இருக்கிறாய்தூலமாக இல்லையே தியாகராஜன் தன் கடவுளைத்தூலமாகக் காணவேஉஞ்சவிருத்தி செய்துஉருகியுருகிப் பாடினான்என்பதைஉனக்குநான்நினைவூட்ட வேண்டுமா? க்ஷீரசாகர சாமி மோகினியாய்மாறி அமிர்தத்தைதேவருக்குஊட்டியதாய்க் கதை நீயெனக்கு அமிர்தம்தருவது எப்போது?

பரோல்

ஒரு மாத பரோல்என்னவும் பேசலாம்என்னவும் செய்யலாம்என்னவும் குடிக்கலாம்ஆடலாம்பாடலாம்களிப்புண்டு கூடலாம் அடக்குமுறைவிடுதலை –ரெண்டையும் வைத்துஒரு கவிதை செய்தேன்மதுவே விடுதலையின்குறியீடாய் நின்றதுகவிதையில் ரத்து செய்தசிநேகிதன் சொன்னான் ”ரிஷி,பருந்தை கிளியாகக்கண்டு விட்டாய்அது பருந்தென்றுகாண்இல்லையேல் அதுஉன்னைத்தின்று விடும்.” மலைமுகட்டில்கையில் உறையுடன்நின்று கொண்டிருக்கிறேன்…

கருணை நிறைந்து அகமும் புறமும் தளும்பி வழியும்…

மாரத்தஹள்ளியில்மோகினிக்குட்டியின்அடுக்குமாடிக் குடியிருப்புகீழ்த்தளத்தில் ஒரு கர்ப்பிணிப் பூனைபேர் சொன்னாள்மறந்து போனேன் கடந்த இரண்டு வருடமாகஅதன் வேலைகர்ப்பந்தரித்திருப்பதுஅல்லதுகுட்டிகளுக்குப் பால் தருவதுஒன்றில்லாவிட்டால்இன்னொன்றுஇதைத் தவிர மற்றபடிஅதை இவள் பார்த்ததில்லை அவ்வப்போதுஅந்தக் குட்டிபற்றி இவள்பேசுவாள்கேட்பதைத் தவிர வேறெனக்குவழியில்லை பூனைகளையெனக்குப்பிடிக்கும்பூனை பற்றிப் பேசுவதுபிடிக்காதுஇருந்தாலும்கேட்பதைத் தவிர வேறெனக்குவழியில்லை பேசிப் பேசிஅந்தக் குட்டிக்கும்எனக்குமொருபந்தமுண்டாயிற்று போல அந்தக் குட்டி பற்றியகதைகளில் முக்கியமானதுஅது சிநேகபாவமற்றதுநெருங்கினால் சீறும்உணவு கொடுப்பதற்கேகொஞ்சம் தந்திரம்பண்ண வேண்டும் ஒருநாள் நான்மோகினிக்குட்டியின்இல்லம் சென்றேன் அந்தப் பூனைக்குட்டியின்உணவு நேரம் வந்ததுகீழே இறங்கினோம் அந்தக் குட்டிஎன்னைக் கண்டதும்ஓடி வந்து என்கால்களுக்கிடையேநுழைந்து நுழைந்துஎட்டுப் போட்டுவிளையாடியது … Read more

நம்ப முடியாத கதை

ஆம்நீவிர் இந்தக் கதையைநம்ப மாட்டீர்எத்தனையோ பேரிடம்இயம்பினேன்கருவிகளின் காலம்கவியின் கதைஏற்பார் எவருமில்லை ஒரு ஊரிலே ஒருஅகோரி இருந்தார் அகோரிக்கொரு மனையாளும்ஒரு புதல்வனும்ஒன்பது சீடர்களுமுண்டு அவர் அகோரியெனஉலகமறியாதுஅறிந்தோர் சீடர் மட்டுமே உயர்படிப்பும்ஆய்வும் முடித்துடாக்டர் பட்டம் பெறுவது போலவேஅகோரியாவதும்! அதுவொரு பாடத்திட்டம் மலத்தை மகிழ்ச்சியுடன்தின்ன வேண்டும்கலவியிலேகளிகொள்ளக் கூடாதுஆசை துக்கம்கோபம் பொறாமைகாமமெதுவும் கூடாதுநெருப்பிலெரியும்பிரேதத்தின் மீதமர்ந்துகொஞ்சமாய் தவமிருக்கவேண்டும் அவ்வளவுதான் எல்லாம் செய்தார்அகோரி அப்போது அவர் முன்னேவந்துதித்தமசானக் காளிஎன்ன வரம் வேண்டுமென்றாள் எது வரமும் வேண்டாம்ஆயிரம்கோடி அழகெலாம் திரண்டொன்றாகிநிற்கும் உன் அருட்செல்வம் எனக்குண்டுபொருட்செல்வமும் குறைவில்லைஎனக்கென்ன வேண்டும் … Read more

ஆத்மாவிலிருந்து பேசுதல்

எழுத்தே என் பிராணன்அந்த எழுத்துடன் பயணிப்பவளென்மோகினிக்குட்டிஅவளோடுகூடஆத்மாவிலிருந்து பேசுவதில்லைகாரணமொன்றுமில்லைசிறைக்கூடத்திலிருந்து எவரேனும்ஆத்மாவிலிருந்து பேச முடியுமா? இந்தப் பேச்சு எதற்கென்றால்ஒருநாள் என் மனையாள் சொன்னாள்யாருடனோ நீ ஆத்மாவிலிருந்துபேசிக்கொண்டிருந்தாய்.சொல்லும்போதுஏக்கத்தின் கேவல்தெறித்து விழுந்தது யோசித்து யோசித்துக் களைத்தேன் ஒருநாள் எதேச்சையாகத்தெரிந்ததுபிராணனைவிட முக்கியமானதேதேனுமுண்டா?உண்டென்றாலதுகவிதை கவிதை பற்றியேஅந்தக் கவிஞனுடன்பேசுவதுண்டுஆத்மார்த்தமாகத்தான் ஆத்மார்த்தியுடன் ஆத்மார்த்தமாகஅல்லாமல் வேறெப்படிப் பேசமுடியும்?