அன்பின் சாரு
22.08.08 உங்களின் கேள்வி பதில் பதி லி ல் என்னுடைய கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தது மகிழ்ச்சி. இந்தக் கேள்வியை தங்களுக்கு அனுப்பி ஒரு மாதம் இருக்கும் என்று நினைக்கின்றேன் .
1. உங்களுடைய பணிச்சூழல் பற்றி ஓரளவிற்கு அறியமுடிகிறது ( இந்த வருடம் வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்விற்கு எஸ்.ராமகிருஷ்ணன் வந்திருந்தபோது கூட சொன்னது சாரு நிறைய படிப்பான் 10 நாட்கள் 15 நாட்கள் என்று வீட்டை விட்டு வெளியே வராமல் படித்துக்கொண்டே இருப்பான் என்று குறிப்பிட்டார் . உங்களுடன் எழுத்தாள நண்பர்கள் தங்கியிருந்தபோது அவர்கள்மீது நீங்கள் எடுத்துக்கொள்ளும் அக்கறை அப்புறம் நீங்களே அவர்கள் எல்லோருக்கும் சமைத்து தருவது என்று..... மேலும் உங்களின் நகைச்சுவை உணர்வைபற்றி அதிகம் குறிப்பிட்டார் )
2. பலர் தங்களுக்கு கடிதங்கள் அனுப்பிவிட்டு மின்னஞ்சல்வழியோ அல்லது உங்களின் இணையம்மூலமாகவோ பதில் வரவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் உங்களுக்கு வரக்கூடிய எல்லா மின்னஞ்சல்க ளையும் படிக் கிறீர்கள் என்பதை உணர்ந்திருப்பார்களா என்று தெரியவில்லை .
3. என்னிடம் கேள்விகளைக் கேட்ட உங்கள் வாசக நண்பனின் பெயர் வாசு - வெள்ளலுர் (கோவை) இலக்கியத்தின் மீது நிறைய ஆர்வம் உள்ளவன். குடும்பம் என்ற வட்டம் எட்டு வருடத்திற்கு முன்பு இருந்த அவனது போக்கை மிகவும் சுருக்கிவிட்டது. தற்போதுதான் மெல்ல மெல்ல மீண்டுவருகிறான் என்று நினைக்கின்றேன். விஜய் டிவியல் உங்களின் ரோஸ் உடனான நேர்காணல் பற்றி அவன் வருந்திய ஒன்றைத் தெளிவு படுத்திக் கொள்ள கடிதம் எழுதி அனுப்பவிருப்பதாக சொன்னான் ( அஞ்சல் வழியே)
பாண்டித்துரை / சிங்கப்பூர்